இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்- பிரதமர் மன்மோகன் சிங்
இலங்கைக்கு எதிராக ஐ.நா சபையில் கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடனான சந்திப்பின் போது உறுதியளித்துள்ளார். சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்றுகாலை சந்தித்துள்ளனர். இதன்போது இந்த உறுதியளிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாக பிரதமரிடம் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். எங்கள் கருத்துக்களை பொறுமையாக கேட்டார். அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவூள்ள மாநாட்டில்இ சென்ற முறை இலங்கைக்கு எதிராக எடுத்த நிலையை தான் இந்த முறையூம் மேற்கொள்வோம் என்று பிரதமர் உறுதி கூறினார் என தமிழக எம்.பிக்கள் குழு ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளது.
Average Rating