ரெலோ இயக்கத்தின் 8ஆவது மாநாட்டை ஏப்ரல் 6ஆம் திகதி
Read Time:54 Second
ரெலோ இயக்கத்தின் 8ஆவது மாநாட்டை ஏப்ரல் 6ஆம் திகதி வவுனியாவில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மகாநாடு கடந்த பெப்ரவரி 8ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிப்பட்டிருந்தது. எனினும் மார்ச் மாதத்திற்கு பிற்போடப்பட்டது. ஜெனிவா கூட்டத் தொடர் மற்றும் ஜேர்மனில் நடைபெறும் மாநாடொன்று ஆகியவற்றில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார். இதனால் மார்ச் மாதத்திலும் ரொலோ மாநாடு இடம்பெறவில்லை. இந்நிலையிலேயே எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Average Rating