தலைமன்னாரில் மீன்பிடிக்க தடை, நடவடிக்கை எடுக்குமாறு சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை
தலைமன்னார் கடற்பரப்புக்குட்பட்ட தீடைகளில் மீன்பிடிப்பதற்கு கடற்படையினர் தடைவிதித்துள்ளனர். இதனால் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமான தமது தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது. எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகோரிக்கை விடுத்துள்ளது. தலைமன்னார் கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் காலம் காலமாக தொழிலினை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கடற்படையினரின் தடை உத்தரவினால் நூற்றுக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி சுதந்திரமாக தொழிலில் ஈடுபட நடவடிக்கை எடுக்குமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Average Rating