இலங்கை ஒரு ஆபத்தான நாடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது -சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம்
Read Time:1 Minute, 7 Second
இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றவியல் பிரேரணை மற்றும் அவர் நீக்கப்பட்ட விதம் என்பன, இலங்கை ஒரு ஆபத்தான நாடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையானது, சட்டத்துக்கு புறம்பான செயலாகும். அத்துடன் சட்டத்தின்மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கையை இது குறைக்கும் செயற்பாடாகும். இந்த சம்பவம் தொடர்பில் தமது நிறுவனம் விசாரணையை நடத்த முயன்றபோதும் அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என சட்டத்தரணிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Average Rating