கண்டி விபசார விடுதியில் கைதான பெண்ணுக்கு எயிட்ஸ்
கண்டி, கடுகண்ணாவ பிலிமதலாவ பிரதேசத்தில் விபசார விடுதியில் கைதுசெய்யப்பட்ட பெண்களில் ஒருவருக்கு எச்.ஐ.வி.வைரஸ் தொற்றியிருப்பது வைத்திய பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கண்டி வைத்தியசாலை சமூக நோய் நிபுணத்துவ வைத்தியர் தெரிவித்துள்ளார். கண்டி குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் குறிப்பிட்ட இவ்விடுதியை சுற்றிவளைத்து சோதனை நடத்தி விடுதி உரிமையாளரான பெண் ஒருவர் உட்பட 6 பெண்களை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட ஆறு பெண்களையும் நீதிவானின் உத்தரவின் பேரில் வைத்திய பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து இவர்களை பரிசோதனைக்குட்படுத்திய சமூக நோய் விஷேட நிபுணத்துவ வைத்தியர் இவர்களை பரிசோதனைக்குட்படுத்தியதில் இவர்களில் ஒருவருக்கு எச்.ஐ.வி.வைரஸ் தொற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வைத்திய அறிக்கையையடுத்து கண்டி பிரதம நீதிவான் ரவீந்திர பிரேமரட்ன அப்பெண்ணை தொடர்ந்து வைத்திய பரிசோதனைகுட்படுத்தி உரிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளுமாறு அப்பெண்ணுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Average Rating