தயா மாஸ்டர் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம்..

Read Time:1 Minute, 22 Second

LTTE.DAYAMASTER1புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதிலும் போட்டியிடப் போவதா இல்லையா என்பதனை தயா மாஸ்டர் உறுதிப்படுத்தவில்லை. எதிர்வரும் வாரங்களில் இது குறித்து அறிவிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர்களான கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர், ஆளும் கட்சியின் சார்பில் அரசியலில் களமிறங்கி முக்கிய பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தயா மாஸ்டர் யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் கடமையாற்றி வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புல்மோட்டை இரட்டைக்கொலை விடயத்தில் உறவுக்கார பெண் கைது
Next post சீனாவில் பூமியதிர்ச்சி, 179 பேர் பலி