கொட்டடியில் இரு இளைஞர்கள் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்
Read Time:50 Second
யாழ் கொட்டடி கோணாத்தோட்டம் பகுதியில் இளைஞர்கள் இருவர்மீது இன்று இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆட்டோவில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களில் இருவர் மீதே தாக்குதல் நடத்தியுள்ளார்.
சுமார் 15 பேர் கொண்ட குழு இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் மீனாட்சி அம்பாள் பகுமியை சேர்ந்த 24வயதான எஸ்.நியூட்டன் மற்றும் சிவஞானம் வினோத் ஆகிய இருவருமே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating