வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு தமிழர் பலி
கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் நேற்றையதினம் மாலை ரயிலில் மோதுண்டு தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிருளப்பனை கொலம்பகே மாவத்தையில் வசிக்கும் 32 வயதுடைய முத்தையா மனோகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
களுத்துறையிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ரயிலிலேயே குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்காக சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.