தி.மலையில் கிரிவலம் ஆசிரியையிடம் 10 பவுன் நகை பறிப்பு!!
Read Time:1 Minute, 12 Second
திருவண்ணாமலை: திருப்பூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி (36). தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம், உறவினர்களுடன் திருவண்ணாமலை வந்தார். சுவாமி தரிசனம் செய்த பின்னர் இரவு பஸ் இல்லாததால், அவர்கள் கோயில் அருகே உள்ள விடுதியில் தங்கினர்.
நேற்று காலை ஜெயலட்சுமி தனது உறவினர்கள் 4 பேருடன் கிரிவலம் சென் றார். அடி அண்ணாமலை அருகே வந்தபோது எதிரே செல்போனில் பேசியபடி வந்த வாலிபர், திடீரென ஜெயலட்சுமி கழுத்தில் கிடந்த தாலி மற்றும் தங்க சங்கலியை பறித்துவிட்டு தப்பினார்.
ஜெயலட்சுமி கூச்சலிட்டார். திருட்டு போன நகையின் மதிப்பு ஸீ2 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
Average Rating