பாடசாலைக்குள் நுழைந்த காட்டு யானைகள்!!

Read Time:1 Minute, 49 Second

images (2)பட்டப்பகலில் பாடசாலைக்குள் திடீரெனப் பிரவேசித்த யானைக் கூட்டத்தால் பாடசாலை அல்லோலகல்லோலப்பட்டது. இச்சம்பவம் பட்டிருப்பு வலயத்தின் போரதீவுப் பற்றுக்கோட்டத் திலுள்ள பிரிவு 35 கண்ணன் வித்தியாலயத்தில் செவ்வாயன்று நண்பகல் 12.00 மணிக்கு இடம்பெற்றது. இது தொடர்பில் பாடசாலை அதிபர் பா.

சுந்தரராஜன் தெரிவிக்கையில, நேற்று முன்தினம் நண்பகல் 12 மணியளவில் திடீரென 04 யானைகள் வேலியை உடைத்துக் கொண்டு பாடசாலைக்குள் நுழைந்தன. எமது பாடசாலையில் அத்தருணம் 61 மாணவர்களும் 04 ஆசிரியர்களும் இருந்தனர். யானை உள் நுழைந்ததும் அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. செய்வதறியாது ஓலமெழுப்பினோம். பாடசாலைக்குள் இருந்த தகர டப்பாக்களை அடித்து ஓலமெழுப்பினோம். ஒருவரையும் கட்டடத்தைவிட்டு வெளியேற அனுமதிக்கவில்லை.

நான் உடனே 119க்கும் கூறினேன், வெல்லாவெளிப் பொலிசுக்கும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பாலச்சந்திரனுக்கும் கூறினேன். சில நிமிடங்களில் பொலிஸார் வந்தனர். அதற்குள் 4 யானைகளும் அருகிலுள்ள காட்டுக்குள் சென்று நின்று கொண்டிருந்தன. நாம் 1.30 மணியளவில் பாடசாலையை மூடினோம் என்று கூறியுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காத்தான்குடியில் மகன் தாக்கி தாய் பலி!!
Next post கிறிஸ்தவ மடத்திற்கு அருகில் நிர்வாணமாக அலைந்து திரிந்தவருக்கு எச்சரிக்கை!!