வாஸ் குணவர்தன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
Read Time:1 Minute, 3 Second
நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன, சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு அவர் தேசிய வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பம்பலபிட்டியைச் சேர்ந்த வர்த்தகரான மொஹமட் சியாமை கடத்தி கொலை செய்த குற்றத்துக்காக வாஸ் குணவர்தன கடந்த 10ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating