சகோதரனின் மகள்மீது பாலியல் வல்லுறவு!!
தனது சகோதரனின் ஐந்து வயதுடைய மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாகியிருந்ததாக சொல்லப்படும் இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இவ்விளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் குளியாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த சந்தேக நபர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் குளியாபிட்டி பிரதேசத்தில் வசிக்கும் தனது சகோதரனின் ஐந்து வயதேயான மகளை வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு அங்கிருந்து தலைமறைவாகி இருந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் குளியாபிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குளியாபிட்டி பொலிஸார் சந்தேக நபரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர் முந்தல் பிரதேசத்தின் வீடொன்றில் வசிப்பதாக முந்தல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
Average Rating