அம்பியூலன்ஸுக்குள் குழந்தை பெற்ற கர்ப்பிணி..!!

Read Time:2 Minute, 44 Second

downloadகாத்­தான்­குடி கடற்­கரை வீதி குண்டும் குழி­யு­மாக காணப்­படும் நிலையில், அந்த வீதி­யினால் கடந்த இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சாலை நோக்கி சென்­று­கொண்­டி­ருந்த அம்­பியூலன்ஸ் வண்­டி­யி­னுள்­ளேயே கர்ப்­பி­ணித்­தா­யொ­ருவர் குழந்தை பிறந்த சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­ற­தாக காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்­சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரி­வித்தார்.

காத்­தான்­குடி பிர­தேச செய­ல­கத்தில் செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற பகு­திநாள் கூட்­டத்தின் போது கருத்து தெரி­விக்­கை­யி­லேயே டாக்டர் ஜாபீர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

“இந்த வீதி குண்றும் குழி­யு­மாக இருப்­பதால் இந்த வீதி­யினால் காத்­தான்­குடி ஆதார வைத்­திய சாலை­யி­லி­ருந்து அம்­பி­யூலன்ஸ் வண்டி மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு நோயா­ளர்­களை ஏற்றிச் செல்லும் போது சிர­மங்­களை எதிர் நோக்க வேண்­டி­யுள்­ளது.

அத்­தோடு ஒரு நாளைக்கு சரா­ச­ரி­யாக காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து பத்து நோயா­ளர்கள் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்றம் செய்ய வேண்டி ஏற்­ப­டு­கின்­றது.

இதன் போதெல்லாம் இந்த வீதி­யினால் அம்­பி­யூலன்ஸ் வண்டி செல்லும் போது நோயா­ளர்கள் சிர­மங்­களை அனு­ப­விக்­கின்­றனர். இவை­களை கருத்­திற்­கொண்டு இந்த வீதியின் அபி­வி­ருத்தி வேலை­களை துரி­தப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கேட்டுக் கொள்­கின்றேன்” என டாக்டர் ஜாபீர் இதன் போது மேலும் தெரி­வித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் இந்த வீதி புனரமைப்பு வேலைகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் ஜோடிகளின் ரீ சேர்டில் புத்த பெருமானின் உருவம்..!!
Next post வர்ணப் பூச்சுகளால் மாத்திரம் உடலை மறைப்பதற்கு எதிராக அமெரிக்க நகரில் அவசர சட்டத் திருத்தம்..!!