கொலை மிரட்டல் விடுத்து தாயையும் மகளையும் வல்லுறவு செய்த அதிகாரி..!

Read Time:1 Minute, 57 Second

images (9)கொலை அச்சுறுத்தல் விடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகளை தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த தோட்ட நிர்வாகி ஒருவரை கைது செய்துள்ளதாக புத்தளம் வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வண்ணாத்திவில்லு ரால்மடுவ பகுதியைச் சேர்ந்த 39 வயது தாயும் 13 வயது மகளுமே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ரால்மடுவ தோட்டத்தில் குறித்த தாய் கூலிவேலை செய்துவந்துள்ளதுடன் மகள் பாடசாலை சென்று பின் இடைநிறுத்தி தாயுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த மே மாதம் தொடக்கம் கொலை மிரட்டல் விடுத்து குறித்த தோட்ட அதிகாரி தாய் மற்றும் மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

கொடுமை தாங்க முடியாது குறித்த தாய் மகளுடன் சென்று வனாத்தவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

55 வயதான சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட தாய் மற்றும் மகள் வைத்திய பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வண்ணாத்திவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லீம் பிரதிநிதி..!
Next post முன்னாள் போராளி ஒருவர் கடத்தப்பட்டு சித்திரவதை..!!