அமெரிக்காவின் புகழ்பெற்ற உளவியல் பேராசிரியர் இளமையில் குடும்பத்தினரை கொன்றமை அம்பலம்..!!

Read Time:4 Minute, 18 Second

1510Americaஅமெ­ரிக்­காவில் பெரும் புகழ்­பெற்ற உள­வியல் நிபு­ணர்­களில் ஒரு­வ­ரான பேரா­சி­ரியர் ஜேம்ஸ் சென் ஜேம்ஸ், இளம் பரு­வத்தில் தனது குடும்­பத்­தி­ன­ரையும் சகோ­த­ரி­யையும் கொலை செய்து தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பி­யவர் என்­பது இப்­போது அம்­ப­ல­மா­கி­யுள்­ளது.

1967.08.04 ஆம் திகதி,  டெக்ஸாஸ் மாநி­லத்தில் வசித்த, சௌத் வெஸ்டர் பல்­க­லைக்­க­ழக உயி­ரியல் பேரா­சி­ரி­ய­ரான டாக்டர் ஜோர்டன் வொல்­கொட்டும் அவரின் மனைவி எலி­ஸ­பெத்தும் 17 வய­தான மகள் லிபியும் துப்­பாக்கியால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டனர்.

ஜோர்டன் வொல்­கொட்டின் மகன் ஜேம்ஸ்வொல்ட் தான் இப்­ப­டு­கொ­லையை செய்­தவர் எனக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அப்­போது ஜேம்ஸ் வொல்கொட் 15 வயது சிறு­வ­னாக இருந்தார். கொலைக் குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்ட அவர் தான் குடும்­பத்­தி­னரை வெறுத்­த­தாக கூறினார்.

எனினும் அவர் சிறு­வ­னா­கவும்  மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­வ­னா­கவும் இருந்­ததால் தண்­டனை பெற­வில்லை. ஆனால் 6 வரு­ட­காலம் அவர் மனநோய் வைத்­தி­ய­சா­லையில் தங்­க­வைக்­கப்­பட்டு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டார்.

அவர் குண­ம­டைந்­த­வ­ராக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட பின் வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்டார்.

பின்னர் தனது பெயரை ஜேம்ஸ் சென் ஜேம்ஸ் என மாற்­றிக்­கொண்ட ஜேம்ஸ் வொல்கொட் புதிய வாழ்க்­கையைத் தொடங்­கினார். உள­வியல் துறையில் பல பட்­டங்­களைப் பெற்ற ஜேம்ஸ் சென் ஜேம்ஸ், கலா­நிதிப் பட்­டமும் பெற்று  இலினோய்ஸ்  மாநி­லத்­தி­லுள்ள மில்கின் பல்­க­லைக்­க­ழ­கத்தில் 1976 ஆம் ஆண்டு முதல் உள­வியல் ஆசி­ரி­ய­ராக பணி­யாற்றத் தொடங்­கினார்.

உள­வியல் கல்­வித்­துறைப் பணி­க­ளுக்­காக பல விரு­து­களை வென்ற அவர் இலினோய் மாநி­லத்தில் அதிகம் மதிக்­கப்­படும் உள­வியல் நிபு­ணர்­க­ளில்­ஒ­ரு­வ­ராக விளங்­கு­கிறார்.  ஆனால், அவர் 46 அற்ப கார­ணங்­க­ளுக்­காக தனது குடும்­பத்­தி­னரை கொலை செய்­தவர் என்ற விட­யத்தை அமெ­ரிக்க பத்­தி­ரி­கை­யொன்று கண்­டு­பி­டித்து அம்­ப­ல­மாக்­கி­யுள்­ளது.

இது குறித்து கருத்துத் தெரி­விப்­ப­தற்கு பேரா­சி­ரயர் ஜேம்ஸ் சென் ஜேம்ஸ் மறுத்­துள்ளார்.

பேரா­சி­ரியர் ஜேம்ஸ் சென் ஜேம்ஸ் ஒரு முன்னாள் கொலை­யாளி என்ற தகவல் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. தற்­போது பல்­க­லைக்­க­ழ­கத்தின் நடத்தை விஞ்­ஞானத் திணைக்­களத் தலை­வ­ராக பதவி வகிக்கும் பேரா­சி­ரியர். அவர் ராஜி­னாமா செய்ய வேண்டும் என பலர் கோரினர்.

எனினும் அவர் தொடர்ந்தும் அப் பத­வி­யி­லி­ருப்பார் என மேற்­படி பல்­லைக்­க­ழகம் தெரி­வித்­துள்­ளது. அவரை ஆபத்தான ஒருவராக தான் கருதவில்லை என பல்லைக்கழக மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.

எனினும், அவர் இப்பல்கலைக்கழத்தில இணைவதற்கு முன்னர் தனது கடந்த காலம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்க வேண்டும் என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல் பறக்கும் சைக்கிள் கண்டுபிடிப்பு..!!
Next post நடிகை கனகாவால் தன் உயிருக்கு ஆபத்து என தந்தை குற்றச்சாட்டு..!!