வயல் வெளியில் பறவைகளை சுட்டவர் கடற்படையினரால் கைது..!!
அம்பாறை அக்கரைப்பற்று கண்ணகிபுரம் வயல் பிரதேசத்தில் நாரை பறவை ஒன்றை துப்பாக்கியால் சுட்ட ஒருவரை நேற்றுக் காலை கைது செய்துள்ளதுடன் சட்டவிரோத துப்பாக்கி ஒன்றையும் அதன் தோட்டாக்களையும் மீட்ட கடற்படையினர் பொலிஸாரி டம் ஓப்படைத்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்;.
கடற்படையினருக்கு கிடைத்த தக வல் ஒன்றினையடுத்து கண்ணகிபுரம் ஆனைப்பாவெளி வயல் பிரதேசத்துக்கு விரைந்த அவர்கள் நாரை பறவையை சொட்கண் துப்பாக்கியினால் ஒருவர் சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தபோது அவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து சட்டவிரோதமான சொட்கண் துப்பாக்கி ஒன்றையும் ஒன்பது தோட்டாக்களையும் சுட்டுவீழ்த்திய ஒரு நாரா பறவையையும் மீட்டு பொலிஸாரிடம் ஓப்படைத்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 29 வயதான அக்கரைப்பற்று 5 ம் பிரிவு மத்திய வீதியைச் சேர்ந்தவர் எனவும். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating