தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையில் புதிய வேகக் கட்டுப்பாடு..!!
Read Time:1 Minute, 21 Second
தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்திற்கும் அதிகமாக பயணிக்கும் சாரதிகளிடம் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் இது அமுலுக்கு வந்துள்ளது.
அண்மையில் தெற்கு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சகோதரனும், சகோதரியொருவரும் உயிரிழந்தனர். இவர்கள் சென்ற வாகனம் மணித்தியாலத்திற்கு 140 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்திருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இத்தகைய விபத்துக்களை தடுக்கும் பொருட்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்திற்கு அதிகமாக பயணிப்போரிடம் 1000 ரூபா தண்டப்பணமாக அறவிடப்படவுள்ளது.
இதுவரை தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையில் அதிக வேகமாக பயணித்ததால் 8 விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 11 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Average Rating