சைக்கிளில் சென்றவர் யானை தாக்கி மரணம்..!!
Read Time:1 Minute, 3 Second
குருநாகல் நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெபெல்லாவ பிரதேசத்தில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் நேற்று காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த நபர் கெபெல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான ஒருவர் என தெரியவந்துள்ளது. இவரது சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற்றுள்ளது.
Average Rating