தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் துப்பாக்கிச்சூடு..!!
தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 44 பேர் உயிரிழந்தனர்.
50 சதவீதம் முஸ்லிம்களும், 50 சதவீதம் கிருஸ்தவர்களும் வாழும் நைஜீரியாவில், இஸ்லாமிய சட்டதிட்டங்களை பின்பற்றும் ஆட்சி முறையை அமைக்க வேண்டும் என்று போராடி வரும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அவ்வப்போது கிருஸ்துவ தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்தி பிராத்தனையில் ஈடுபடும் மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
இதேபோல், பழைமைவாதம் பேசும் முஸ்லிம்களையும் அவர்கள் சுட்டுத் தள்ளுகின்றனர்
இந்த நிலையில் போர்னோ மாநிலம், மைடுடுரி பகுதியில் உள்ள மசூதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்ளுர்வாசிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆயுதங்களுடன் மசூதிக்குள் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தொழுகை நடத்தியவர்கள் மீது கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தில் 44 பேர் பலியானதாக போர்னோ மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating