சிறுவர்களைப் பயன்படுத்தி பஸ் பயணிகளிடம் திருட முயற்சித்த இரு பெண்கள் கைது..!!
Read Time:1 Minute, 11 Second
சிறுவர்களைக் கொண்டு பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணொருவரின் கைப்பையிலிருந்த 1720 ரூபாவை திருட முயற்சித்ததாகக் கூறப்படும் இரண்டு பெண்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி களுத்துறை மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் அஜிதாப் சமரசேகர உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவன் பஸ்வண்டியை நிறுத்தியவுடனேயே தப்பி ஓடிவிட்டதாக சந்தேகநபர்களான இரு பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாட்டாளரான பெண்ணின் பையிலிருந்து 1720 ரூபாவை சிறுவன் மூலம் திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
Average Rating