20 வருடங்களில் முதல் தடவையாக தலைமயிரை கத்தரித்த ஆணும், 55 அடி நீளமான கூந்தல் கொண்ட பெண்ணும்…!!
16 வயதிலிருந்து தனது தலைமயிரை கத்தரிக்காமல் வளர்த்து வந்த நபர் ஒருவர், 20 வருடங்களின் பின் அண்மையில் தலைமயிரை கத்தரித்துக்கொண்டுள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த காரெத் ரொபின்ஸன் எனும் இந்நபர் 16 வயதானபோது, எந்த வகையான, சிகையலங்காரம் தனக்குப் பொருத்தமாக இருக்கும் எனத் தெரியாமல் தலைமயிரை பின்னோக்கி சீவி சடைபின்னிக்கொண்டாராம்.
5 அடி நீளம்வரை இத்தலைமயிர் வளர்ந்த பின்னர் கடந்த இரு வருட காலத்தில் முதல் தடவையாக சிகையலங்கார நிலையத்துக்கு அவர் சென்றுள்ளார். அவரின் கத்தரிக்கப்பட்ட தலைமயிர் சுமார் ஒன்றரை கிலோ எடைகொண்டதாக இருந்தது.
தான் கதிரையில் அமரும்போது பல சந்தர்ப்பங்களில் தலைமயிர் மீது அமர்ந்துவிட நேரிட்டுள்ளதாக 36 வயதாகும் ரொபின்ஸன் கூறுகிறார்.
இதுவரை தலைமயிரை கழுவுவது சிரமமான ஒரு விடயமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். குளிக்கும்போது, ரொபின்ஸனின் தலைமயிரை அவரின் காதலியான ஜெனா (22) தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பாரா
ஒன்றரை கிலோ எடையுடைய தலைமயிரை கத்தரித்தபின் பெரும் வித்தியாசத்தை உணர்வதாக அவர் கூறுகின்றார்.
இத்தலைமயிரை கத்தரித் துக் கொள்வதன் மூலம் அனுசரணையாளர் ஊடாக, புற்றுநோய் ஆராய்ச்சி நிலையமொன்றுக்கு 5,000 ஸ்ரேலிங் பவுண்கள் நிதியையும் அவர் திரட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இதேவேளை, உலகின் மிக நீளமான தலைமயிர் கொண்ட பெண்ணாக ஆஷா மண் டேலா கின்னஸ் சாதனை நூலினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்
ட்ரினிடாட் அன்ட் டுபாக்கோ நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர் இவர். ஆஷாவின் கூந்தல் 55 அடி நீளமானது. பெரியதொரு பஸ்ஸை விட நீளமான இக்கூந்தல் சுமார் 20 கிலோ எடை கொண்டது.
கடந்த 25 ஆண்டுகளாக அவர் தலைமயிர் வளர்த்து வருகிறார். இக்கூந்தலினால் அவருக்கு பல ரசிகர்கள் கிடைத்துள்ளதுடன் கூந்தல் பராமரிப்பு பொருட்களின் வர்த்தகத்தை ஆரம்பிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனினும், பாரமான கூந்தல் காரணமாக, 47 வயதான ஆஷா வின் முள்ளந்தண்டு, முதுகு, கழுத் துப் பகுதிகளில் உபாதைகள் ஏற் பட்டுள்ளன. இது ஆரோக்கிய மான விடயம் அல்ல என மருத்து வர்கள் எச்சரித்துள்ளனர்.
Average Rating