2 இலட்சம் தூக்க மாத்திரை வைத்திருந்த நபருக்கு அபராதம்..!!
Read Time:1 Minute, 16 Second
சட்டவிரோதமாக இரண்டு இலட்சம் தூக்க மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ருவன்வெல்ல, அங்குருவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கு கொழும்பு அவிசாவளை நீதிவான் நீதிமன்ற நீதிவான் டி.எச்.ஏ. செனவிரட்ண 50,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளிததுள்ளார்.
உணவு மற்றும் மருந்து வகை அதிகாரசபையின் பரிசோதகர் டி.ஏ. விக்கிரமசிங்க தலைமையிலான அதிகாரிகள் சந்தேகநபரை அவிசாவளை நீதிமன்றத்தில் ஆஜர்செய்தனர்.
சமீபத்தில் கொஸ்கம, புஸ்வெல்ல, பாரமிரோடிலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தூக்க மாத்திரைகளை அதிகார சபை அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றியுள்ளனர்
Average Rating