அமைச்சு பதவிகள் தொடர்பில் இந்த தீர்மானமும் இன்றி கூட்டமைப்பின் கூட்டம் நிறைவு!
மாகாண சபைத் தேர்தலில் வடமாகாணத்தைக் கைப்பெற்றியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது அமைச்சரவையை நியமிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதால் இறுதித்தீர்மானம் எதனையும் எடுக்கமுடியாத நிலையில் சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது
முதமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 4 மணித்தியாலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சுப் பதவிகள் மற்றும் பதிவியேற்பு தொடர்பில் எந்த விதமான முடிவும் எட்டப்பாத நிலையில் கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள இரண்டு வோனஸ் ஆசனங்களை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவருக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்வேட்பாளர் ஒருவருக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த இரண்டு ஆசனங்களும் கட்சித்தலைவர்களின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் வழங்க்பட்டுள்ளது.
இதில் பெண்வேட்பாளர் ஒருவருடகாலம் மாகாண சபை உறுப்பினராக கடமையாற்றுவார் என்றும் பின்னர் அந்த உறுப்பினர் பதவி சுழற்சி அடிப்படையில் மலைய மக்கள் மற்றும் மதங்களை பிரதிபலிக்க கூடிய வகையில் இந்த உறுப்பினர் பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் கலந்துகொள்ளாத நிலையில் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன்,சுமந்திரன், சிறிதரன், அடைக்கலநாதன், சிவசத்தி ஆனந்தன், சரவணபவன், உட்பட புளொட் தலைவர் சித்தார்த்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலங்கம், சிறிக்காந்தா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Average Rating