மகாவலி கங்கையில் மூழ்கிய சிறுவர்கள் சடலங்களாக மீட்பு!!
மகாவலி கங்கையில் நீராடிய நிலையில் காணாமல் போன இரு சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கண்டி மகியாவைச் சேர்ந்த ராமலிங்கம் ரிஸீபன் (15), தர்மராஜா கோகுலன் (16) ஆகிய இரு சிறுவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி மகாவலி உயிரிழந்துள்ளனர்.
கண்டி கலை மகள் பாடசாலையில் கல்வி பயிலும் இவர்கள் வட்டாரந்தென்ன எலிபன்ட்பாத் என்ற இடத்தில் நடைபெற்ற சாந்தி கரும பூஜையில் பங்குபற்ற சென்றிருந்த போதே இந்த அனர்த்ததுக்குள்ளாகினர்.
பூஜையின் பின்னர் இவ்வர சிறுவர்களும், ஆற்றில் குளிக்க முற்பட்ட போது பூஜையை நடத்திய பூசகர் அவர்களை அங்கு குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளார்.
அதேவேளை, ஆற்றில் அப்பகுதியில் பொது மக்கள் குளிப்பதற்கு தடை என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் இருவரும் இவற்றைப் பொருட்படுத்தாமல் ஆற்றில் நீராடியுள்ளனர்.
Average Rating