மாணவிக்கு நிர்வாணத்தை காட்டிய பொறியியலாளர் அச்சத்தினால் தற்கொலை..!!
அளவ்வ, பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது பாசாலை மாணவியொருவருக்கு நிர்வாணத்தைக் காட்டியதாக கூறப்படும் பொறியியலாளரொருவர் மாணவியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து அச்சத்தின் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு ள்ளார். பொலிஸார் நேற்று முன்தினம் 7 ஆம் திகதி சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
குளிக்கும் கிணற்றுக்கு அருகே கடந்த 6 ஆம்திகதி குளித்துக் கொண்டிருந்த இந்த மாணவிக்கு இந்தப் பொறியியலாளர் தனது நிர்வாணத்தைக் காட்டியுள்ளார் என கூறப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பாக மாணவியின் தாய் வரக்காபொல பொலிஸ் நிலையத் தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தப் பொறியியலாளர் பொலிஸ் நிலையம் செல்ல அச்சத்தின் காரணமாக அப் பிரதேசத்தில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்று விறகு மடுவத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த பொறியியலாளர் இதற்கு முன்னரும் பல யுவதிகளுக்கு தனது நிர்வாணத்தைக் காட்டியுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.காலஞ்சென்றவரின் சடலத்தை வரக்காப்பொல பொலிஸார் பிரேத பரிசோதனைகளுக்காக குருநாகல் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப் படைத்துள்ளனர்.
Average Rating