கனடா மறுத்ததையிட்டு அரசாங்கம் அதிருப்தி!
Read Time:1 Minute, 23 Second
பொதுநலவாய நாட்டு தலைவர்களின் கூட்டத்திற்கு உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்ப கனேடிய அரசாங்கம் மறுத்ததையிட்டு இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கனடா இந்த மாநாடு தொடர்பில் உள்நாட்டு பிரச்சினைகளை பயன்படுத்தக் கூடாதென இலங்கை கூறியுள்ளது.
பொதுநலவாயம் என்பது சுய விருப்பத்தின் அடிப்படையிலான ஒரு கூட்டமைப்பு இதில் எந்த ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டின் விடயத்தை மதிப்பிட உரிமையில்லையென வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
பொதுநலவாயத்தில் உள்ள ஏராளமான நாடுகள் மாநாட்டில் பங்கு பெறவுள்ளன என அமைச்சர் கூறியுள்ளார்.
கனேடிய பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பர் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றப் போவதில்லையெனும் தனது தீர்மானத்தை ஊர்ஜிதம் செய்துள்ளார்.
இலங்கை மனித உரிமை விடையத்தை கவனிக்க தவறிவிட்டது என அவர் கூறியுள்ளார்.
Average Rating