மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுமி மரணம்!!
Read Time:1 Minute, 5 Second
கட்டிடம் ஒன்றின் இரண்டாம் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த ஐந்து வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி, தன்னேகும்புர பிரதேசத்திலேயே இந்த சம்பவம் குறித்து பதிவாகியுள்ளது.
கடந்த 6ஆம் திகதி காலை மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுமி கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் 7ஆம் திகதி மாலை உயிரிழந்துள்ளார்.
குறித்த கட்டடத்தில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அதனை பெற்றோருடன் பார்ப்பதற்குச் சென்ற நிலையில் சிறுமி கால் தவறி கீழே விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Average Rating