சத்திர சிகிச்சை மூலம் கைகள் பொருத்தும் நவீன முறை!!

Read Time:1 Minute, 40 Second

win-01விபத்துக்களின் போது அவயவங்களை இழக்கும் நபர்களுக்கு உறுப்பு மாற்றும் அடிப்படையில் சத்திரசிகிச்சை மூலம் கைகளை பொருத்தும் அதி நவீன முறையை இலங்கை விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.

குறித்த இலங்கை விஞ்ஞானி இந்த ஆய்வினை சுவிட்ஸர்லாந்து நாட்டின் பேர்ண் பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.

மேலும் இந்த ஆய்வினை வைத்திய கலாநிதி துசித ஜயமான என்ற விஞ்ஞானியின் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

இந்த முறைக்கமைய எலிகளை உபயோகித்து கைகள் உறுப்பு மாற்று சத்திர சிகிச்சை குறித்த ஆய்வு நடாத்தப்படும் அதேவேளை அநேகமாக கை உறுப்பு மாற்று சிகிச்சையின் போது ஏற்படும் பிரதான சிக்கலான நோய் எதிர்ப்பு சக்தி பொறி முறைமையை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் இந்த நவீன முறைமையின் மூலம் மீளப் பொருத்தப்படும் கையின் நோய் எதிர்ப்பு சக்தி பொறி முறைமை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பொறி முறைமையுடன் இயைபொத்து தொழிற்படுவதாகத் கண்டறியப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் தாக்குதலில் கணவன் மரணம்!!
Next post பாகிஸ்தான் ரயிலில் குண்டு வெடிப்பு 7 பேர் உயிரிழப்பு; 16 பேர் காயம்!!