கூட்டமைப்பினரும் ஆதரவாளர்களும் முரண்படுவது நல்லதல்ல- “துண்டுப்பிரசுரம்”

Read Time:2 Minute, 9 Second

tna.ltteதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அன்பான வேண்டுகோள் எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுரம் ஒன்று வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கோப்புக்களில் வைக்கப்பட்டிருந்தது.

இன்றுகாலை நடைபெற்ற வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கோப்புக்களிலேயே இவை வைக்கப்பட்டிருந்தன

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இணைந்துள்ள கட்சிகளும் தலைவர்களும் ஆதரவாளர்களும் முரண்பட்டு நிற்பது மிக மோசமான நிலையை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை

நீங்கள் வடமாகாண மக்களையும் மண்ணையும் நேசிப்பவர்களாக இருப்பீர்களானால் நிச்சயமாக விட்டு கொடுப்புக்களும் அர்ப்பணிப்புகளும் மிக முக்கியமானது.

மக்கள் எதிர்பார்த்து நம்பிக்கை வைத்து தமது பொன்னான வாக்குகளை தங்களுக்கு அளித்த எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நிச்சயப்படுத்தி உத்தரவாதப்படுத்துங்கள்.

அவ்வாறு செய்யாவிடின் அடுத்து வரும் தேர்தல்களில் தர்ம சங்கடமான நிலைகளை தோற்றுவிக்கும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என அந்த துண்டு பிரசுரத்தில் காணப்பட்டது.

அந்த துண்டு பிரசுரத்தை இரா.தேசபிரியன், வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்களின் ஒன்றியமும் சமூக அமைப்புக்கான மக்கள் பேரவையும் உரிமை கோரியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாநாட்டில் பங்கேற்பதில் மாற்றமில்லை
Next post மருமகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாமனார் பொலிஸாரால் கைது