நண்பனுடன் குடும்பம் நடத்திய மனைவி..:, தனக்கும் மகனுக்கும் தீயிட முயற்சித்த நபர்

Read Time:2 Minute, 10 Second

love.kalla_kadhal_1நெருங்கிய நண்பரொருவருடன் தனது மனைவி குடும்பம் நடத்தச் சென்றதால் ஆத்திரமுற்ற கணவர் தனது மகன் மீதும் தன்மீதும் பெற்றோல் ஊற்றி தீயிட்டுக் கொள்ள முயற்சித்தபோது அங்கு தற்செயலாக வந்த குருணாகல் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தீயிட்டுக் கொள்ள முயற்சித்த நபரையும் அவரது மனைவி மற்றும் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜந்த சமரகோனுடன் குருணாகல் பொலிஸ் பரிசோதகர் அஜித் வங்கநாத ஆகியோர் கடமையொன்றின் நிமித்தம் ஜீப் வண்டியில் சென்று கொண்டிருந்தபோது குருணாகல வத்ஹிமி வீதியிலுள்ள கபே பண்டார ஆலயத்துக்கருகில் இருவருக்கிடையில் நடந்த மோதலைக் கண்டு அதை தடுத்து நிறுத்தியபோது இச்சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

இரு நபர்கள் மோதலில் ஈடுபட்டபோது ஒரு பெண் குழந்தையுடன் அழுதுகொண்டு நின்றுள்ளார். மோதலை தடுத்து நிறுத்திய பின்னர் அந்த இடத்தில் பெற்றோல் மணம் வீசவும் பொலிஸார் அது குறித்து விசாரித்துள்ளனர்.

கணவர் குழந்தை மீதும் தன்மீதும் பெற்றோல் ஊற்றி தீ வைக்க முயற்சித்தபோது பொலிஸார் வந்ததால் தீயிட முடியாமற் போயுள்ளது. இப் பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த இளைஞன் 20 வயதானவரெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுபோதையில் வந்து மனைவி, பிள்ளைகளை துன்புறுத்தியவருக்கு விசித்திரமான தண்டனை
Next post தெரு நாயுடன் உறவுகொண்ட 52 வயது நபர்