கண்டி மத்திய சந்தை, அரச மரத்தடி உண்டியலில் 259 ரூபா பணம் திருட்டு
கண்டி மத்திய சந்தை முன்னாலுள்ள அரச மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த அன்பளிப்பு உண்டியலை உடைத்து பணம் திருடியவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த கண்டி மேலதிக நீதிவான் சேசிரி ஹேரத் முன்னிலையில் தெரிவிக்கப்பட்ட புகாரில் இந்த உண்டியலில் இருந்து 259 ரூபா பணம் திருடப்பட்டதாகவும் சந்தேக நபர் இந்த அரச மரததடியிலுள்ள வழிபாட்டுத்தளத்தில் ஊழியராக தங்கி தெய்வஊழியம் புரிந்து வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கண்டி ஹந்தெஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த மத்தும பண்டார என்பவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் மேற்படி வழிபாட்டுத்தளத்தில் நடந்து கொண்டதை அவதானித்த போக்குவரத்துப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ்காண்ஸ்டபிள் மேற்படி நபரைக் கைது செய்து விசாரித்த போதே திருட்டுச் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
Average Rating