கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியை, அடிக்கப் பாய்ந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி.!!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கட்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி அவர்கட்குமிடையில் தனிப்பட்ட சந்திப்பொன்று சிவசக்தி ஆனந்தன் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது
மேற்படி கலந்துரையாடலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன?, மற்றவர்களை புறம்தள்ளி வைப்பதா கொள்கை? போன்ற வாத பிரதிவாதங்கள் ஆனந்தசங்கரியால் முன்வைக்கப்பட்ட போது வாதபிரதிவாதம் காரசாரமாக முன்னெடுக்கப்பட்டு உச்சகட்டத்தையடைந்த நிலையில் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகித்தது மட்டுமன்றி கைகலப்பில் ஈடுபடாதது தான் குறை என்னும் அளவுக்கு செல்லும் வேளையில் அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தலையிட்டு சுமூகநிலைக்கு வந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது
இவ்வாறாக இருவருக்குமிடையில் சம்பவம் நடக்கும் வேளையில், ஆனந்தசங்கரி ஐயா மிகவும் மரியாதையாகவே நடந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினறும் தமிழர் விடுதலை கூட்டணியின் வவுனியா மாவட்ட நிர்வாக தலைவருமான இராஜகுகநேஸ்வரநோடு தொடர்பு கொண்ட போது “இவ்வாறன சம்பவம் ஒன்று நடைபெற்றதாக நாம் அறிகின்றோம், மேலதிக விபரங்கள் தெரியாது எனவும், தகவல் கிடைக்குமிடத்து தெரியப்படுத்துவதாகவும்” கூறியுள்ளார்.
Average Rating