பிரித்தானியாவில் வெள்ளம்
Read Time:51 Second
பிரித்தானியாவில் வெள்ள நிலைமை தொடர்வதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர்.
வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் பிரித்தானியாவின் மேற்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
டோர்செட் உள்ளிட்ட இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
Average Rating