அமெரிக்காவில் சிறையிலிருந்து தப்பியோடிய கைதி, குளிருக்குப் பயந்து சரண்

Read Time:1 Minute, 25 Second

usa.flagஅமெரிக்காவில் சிறையிலிருந்து தப்பிய கைதி, கடுங்குளிரை தாக்கு பிடிக்க முடியாமல் மீண்டும் சிறையில் சரண் புகுந்தார்.

அமெரிக்காவின் பல நகரங்களில், கொள்ளை மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர் ராபர்ட் விக். இந்த குற்றங்களுக்காக, ராபர்ட்டுக்கு, ஆறு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த வாரம் சிறையிலிருந்து தப்பி, கென்டகி நகரில் தலைமறைவானார். அந்த நகரில், மைனஸ் 29 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பனிக்காற்று வீசியது.

குளிரை தாக்கு பிடிக்க முடியாத ராபர்ட், அருகில் இருந்த, மோட்டலுக்குச் சென்று, அங்கிருந்த பணியாளரிடம், போலீசுக்கு போன் செய்து தகவல் தெரிவிக்கும்படி கேட்டார்.

தகவல் கிடைத்து வந்த போலீசாரிடம், கடும் பனியில் இருந்து, தன் உயிரைக் காக்கும்படி வேண்டி, சரணடைந்தார். ராபர்ட்டை கைது செய்த போலீசார், முதலுதவி அளித்த பின், சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது, குளிருக்கு 21 பேர் பலி..!!
Next post எஞ்சியிருக்கும் ‘ஆவா’ குழுவினரை கைது செய்ய தீவிர நடவடிக்கை