பாலில் தண்ணீர் கலந்த வழக்கில் 27 வருடங்களுக்குப் பின் தீர்ப்பு: பால்காரருக்கு 6 மாத சிறை
Read Time:1 Minute, 12 Second
இந்துர்: கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் பாலில் தண்ணீர் கலந்து விற்றதாக பால்காரர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து இந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த பால் வியாபாரி ஒருவர் மீது, பாலில் அதிகளவு தண்ணீர் கலந்து விற்பனை செய்ததாக கடந்த 1986ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இதனை அடுத்து அவர் 1986ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி கைது செய்யப்பட்டார்.
கிட்டத்தட்ட 27 வருடங்கள் வழக்கு விசாரணைக்காக அழைந்த அந்த நபர், தனது வயதை காரணம் காட்டி குற்றத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார்.
ஆன போதும், மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Average Rating