வேலணையில் கடைக்குச் சென்ற மூதாட்டி சடலமாக மீட்பு!
Read Time:52 Second
யாழ்ப்பாணம் வேலனை மேற்குப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம், வேலணை மேற்கு பகுதியைச் சேர்ந்த 70 வயதான அருளப்பு அல்வினம்மா எனும் மூதாட்டியுடையது எனத் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு கடைக்குச் செல்வதாக கூறிச் சென்ற இவர், வீடு திரும்பாததையடுத்து தேடிய போதே இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
Average Rating