ஆட்டோவை மோதி குப்புற வீழ்த்தி, கடைக்குள் புகுந்த பஸ்
Read Time:59 Second
திருகோணமலை மட்கோ சந்தியில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இ.போ.ச பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கடைக்குள் புகுந்தது. இதனால் ஐவர் படுகாயமுற்று திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற பஸ் பின்னர் டிப்போவுக்குத் பஸ் திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை நகரில் இருந்து வருகையில் மட்கோ சந்தியில் வலப்பக்கமாகவுள்ள கடைத் தொகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றது இதன்போது நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல ஆட்டோக்களும் சேதமாகின.
Average Rating