ஒபாமாவை சுட்டு கொல்ல முயன்றவனுக்கு 25 ஆண்டு ஜெயில்
Read Time:1 Minute, 21 Second
அமெரிக்காவில் வாஷிங்டன் நகரை சேர்ந்தவன் ஆஸ்கர்ரமரோ ஒர்டெகா– ஹெர்னான்டஸ் (30). கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான்.
எனவே அவனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அதிபர் ஒபாமாவை கொலை செய்யும்படி கடவுள் தன்னிடம் கூறியதாக அவனது நண்பர்களிடம் கூறியது தெரிய வந்தது.
எனவே அவன் ஒபாமாவை கொலை செய்ய முயன்றதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு வாஷிங்டன் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு ஒர்டெகா– ஹெனாண்டசுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்தது.
முன்னதாக இவனுக்காக வாதாடிய வக்கீல்கள் இவன் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எனவே 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கும்படியும் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.
Average Rating