என் கவர்ச்சி ஸ்டில்லை எப்படி வெளியிடலாம் – தயாரிப்பாளர், போட்டோகிராபர் மீது ஸ்ருதி பாய்ச்சல்
படத்தில் தனது தாறுமாறான கவர்ச்சி ஸ்டில்களை வெளியிட்டதற்காக படத்தின் தயாரிப்பாளர், புகைப்படக்காரர் மீது வழக்குப் போடப் போகிறாராம் ஸ்ருதிஹாஸன்.
தான் நடிக்கும் தெலுங்கு, இந்திப் படங்களில் உச்சபட்ச கவர்ச்சி காட்டுவதென்று களமிறங்கிவிட்டார் நடிகை ஸ்ருதிஹான். இந்த பாலிசி தமிழ்ப் படங்களுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது!
ஸ்ருதி ஹாஸன் சமீபத்தில் ரேஸ் குர்ரம் என்ற தெலுங்குப் படத்தில் கிட்டத்தட்ட அரை நிர்வாணம் எனும் அளவுக்கு அவரது உடைகள் குறைந்திருந்தன.
இந்தப் பட போஸ்டர்கள் ஹைதராபாதில் ஒட்டப்பட்ட போது, மக்கள் அதைப் பார்த்து கவனம் சிதறியதால் ட்ராபிக் ஜாம் ஏற்பட்டது, சிறு விபத்துகள் நேர்ந்தன என சமூக நல ஆர்வலர்கள் குறைகூறி, போஸ்டர் கிழிப்பு போரில் குதித்தது நினைவிருக்கலாம். இதெல்லாம் ஒரு கவர்ச்சியா எனும் அளவுக்கு, ஸ்ருதியின் செக்ஸியான படங்கள் இணைய தளங்களில் வெளியாகின. குறிப்பாக ஒரு பாடல் காட்சியின் மொத்த ஸ்டில்களும் தெலுங்கு இணையதளங்களில் வெளியாகின.
இதனால் கடுப்பான ஸ்ருதிஹாஸன், ‘இந்த கவர்ச்சிப் படங்களை வெளியிட்டவர் மீது போலீசில் புகார் செய்வேன். சட்ட நடவடிக்கையும் எடுப்பேன்,’ என்று பாய்ந்துள்ளார்.
எவடு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் அல்லது அப்படத்தின் ஸ்டில் போட்டோ கிராபர் இருவரில் யாரேனும் ஒருவர்தான் இந்த படங்களை வெளியிட்டு இருக்க வேண்டும் என்று அவர் சந்தேகிக்கிறாராம்.
‘சரி, அப்படியே இருக்கட்டும்… ஒரு கேள்வி. இந்த ஸ்டில்கள் அனைத்தும் படத்தில் இடம்பெற்று பாடல் காட்சியிலிருந்து எடுத்தவைதானே..
அதுவும் அரசு தணிக்கை செய்த பாடல்தானே அது? இவர் ஷூட்டிங்கில் காட்டாததையா படமெடுத்தார்கள்..? எந்த அடிப்படையில் ஸ்ருதி புகார் தருவார்?’ -இது நம் கேள்வியில்லை… ரேஸ் குர்ரம் பட புகைப்படக்காரரின் கேள்வி!
Average Rating