சிறுமியுடன் குடும்பம் நடத்திய இராணுவ வீரர் கைது!
Read Time:1 Minute, 16 Second
சட்ட விரோதமாக 14 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இராணுவ வீரர் ஒருவரை நேற்று முன்தினம் ஹசலக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராகொல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றினையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் பாழடைந்த வீடொன்றினை சுற்றி வளைத்து சோதனை செய்த போதே குறித்த நபரையும், சிறுமியையும் கைது செய்துள்ளனர்.
சிறுமி நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் நபர் மொனராகல இராணுவ முகாமில் கடமையாற்றும் சோல்ஜர் என்றும் குறித்த நபர் கடந்த சில தினங்களாக சிறுமியை தகாத உறவுக்குட்படுத்தியதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
Average Rating