அருப்புக்கோட்டை அருகே பெண்ணை ஏமாற்றி கற்பழிப்பு: தொழிலாளி கைது!!

Read Time:1 Minute, 46 Second

b9455961-5b92-4987-9c02-633b74746ae6_S_secvpfஅருப்புக்கோட்டை அருகே உள்ள கணக்கனேந்தலை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பாண்டீசுவரி (வயது16). 10–ம் வகுப்பு முடித்த இவர், விருதுநகரில் உள்ள ஒரு தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார்.

கடந்த 2–ம் தேதி வேலைக்கு சென்ற பாண்டீசுவரி அதன் பிறகு வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் அவரை தேடியும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் விருதுநகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பாண்டீசுவரி இருப்பதாக முருகனுக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்று மகளை முருகன் அழைத்து வந்தார். அப்போது பாண்டீசுவரியுடன் வேலைபார்த்த முடியனூரை சேர்ந்த முத்துராமலிங்கம் (37) என்பவர் ஆசைவார்த்தை கூறி கரூருக்கு அழைத்து சென்றது தெரியவந்தது. மேலும் அவரை திருமணம் செய்து கற்பழித்துவிட்டு விருதுநகர் கொண்டு வந்து விட்டு சென்றதாகவும் பாண்டீசுவரி தெரிவித்தார்.

இது குறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் முருகன் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மைனர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கற்பழித்ததாக முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பித்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரையில் மின் மயானத்தில் உடலை எரித்ததில் ரூ.30 லட்சம் மோசடி!!
Next post 2-வது திருமணம் செய்து மிரட்டல்: மனைவியிடம் வரதட்சணை கொடுமை-கண்வர் கைது!!