கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் போலீஸ் மீது தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு!!
கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரை சேர்ந்தவர் அம்மாபொண்ணு (வயது 22). இவர் நீலகிரியில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குராயூரை சேர்ந்த மகாலிங்கத்துக்கும் அம்மாபொண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
மகாலிங்கம் மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். ஒரு வருடம் அவர்கள் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் ஒரு வார விடுமுறையில் அம்மா பொண்ணு சொந்த ஊர் வந்திருந்தார். நேற்று அம்மாபொண்ணுவை, கணவர் மகாலிங்கம், மாமியார் பாண்டியம்மாள், மாமனார் கந்தன், மகாலிங்கத்தின் அண்ணன் முருகேசன், தம்பி பாண்டி, மற்றும் ஈஸ்வரி ஆகியோர் தாக்கினர். இதில் அம்மாபொண்ணு பலத்த காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பெண் போலீசை தாக்கிய கணவர் மகாலிங்கம் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating