கள்ளக்காதல் – மனைவியை வெட்டி வேக வைத்த கணவன்!!
கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி உடலை வேக வைத்து ஆற்றில் வீசிய கணவர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவில் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஸ்ரீராமகிருஷ்ணா. இவரது மனைவி மரியம்மாள் (42). இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளார்.
மரியம்மாளுக்கும் இன்னொருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனை அறிந்த ஸ்ரீராமகிருஷ்ணா மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர் கேட்கவில்லை.
சம்பவத்தன்று வீட்டில் மரியம்மாள் தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை ஸ்ரீராமகிஷ்ணா பார்த்துவிட்டார். ஆவேசம் அடைந்த அவர் கத்தியுடன் ஓடிவந்தார். அதற்குள் காதலன் தப்பி ஓடிவிட்டார்.
மனைவி மரியம்மாளை கத்தியால் குத்தினார். அதோடு அவரது ஆத்திரம் அடங்கவில்லை. அரிவாளை எடுத்து வந்து கீழே விழுந்து கிடந்த மனைவியை உடலை காலால் மிதித்து கழுத்தில் அரிவாளால் வெட்டினார். இதில் தலை துண்டாகி விழுந்தது.
பின்னர் கத்தியால் கை, கால், உடல்களை துண்டுதுண்டாக வெட்டினார். வயிற்றை கிழித்து குடலை வெளியே எடுத்தார்.
பின்னர் உடல் துண்டுகளை பெரிய அரிசி டப்பாவில் போட்டு அடுப்பில் ஏற்றி வேக வைத்தார். பின்னர் உடல் துண்டுகளை டப்பாவில் போட்டு அருகில் உள்ள ஆற்றில் வீசிவிட்டு வீடு திரும்பினார்.
வீட்டில் இருந்த ரத்தக் கறைகளை கழுவினார். இதற்காக அதிக அளவு பினாயில், மண்எண்ணெய் பயன்படுத்தினார். அதிக நெடி வீசவே அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டை எட்டிப்பார்த்தனர். மரியம்மாள் எங்கே என்று கேட்டனர்.
அவர்களிடம் என் மனைவியை கொலை செய்துவிட்டேன். நீங்கள் போலீசுக்கு சொல்லுங்கள் என்று கூறினார்.
தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு வந்தனர். அவர்களிடம் ஸ்ரீராமகிருஷ்ணா சரண் அடைந்தார். என் மனைவியுடன் வாழ்வதை விட சிறையில் இருக்க தயார் என்று அவர் கூறனார். போலீசார் ஸ்ரீராம கிருஷ்ணனை கைது செய்தனர்.
Average Rating