பேட்டையில் பெண்ணை கல்லால் தாக்கி நகை பறிப்பு!!

Read Time:1 Minute, 49 Second

490ec87c-1d6f-4125-99d5-84a370561fb0_S_secvpfபேட்டை கோடீஸ்வரன் நகர் 14வது தெரு வைகை சாலையை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மனைவி சரஸ்வதி(வயது 35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். காத்தவராயன் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். சரஸ்வதி தையல் வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு சரஸ்வதி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் சரஸ்வதி வீட்டில் இருந்து வெளியே வரும் நேரம் பார்த்து வீட்டின் ஓரமாக பதுங்கி இருந்தார். சரஸ்வதி வெளியே வந்தபோது திடீரென்று சரஸ்வதி கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்தார். உடனே சரஸ்வதி திருடன் திருடன் என சத்தம் போட்டவாறு கொள்ளையனிடம் போராடினார்.

ஆத்திரம் அடைந்த கொள்ளையன் சரஸ்வதியை கல்லால் தாக்கி கீழே தள்ளிவிட்டு நகையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம். இதுபற்றி சரஸ்வதி பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேட்டை பகுதியில் குற்றப்பிரிவு போலீசார் அடிக்கடி ரோந்து வந்து இதுபோன்ற குற்ற செயல்களை தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்குழந்தை மர்ம சாவு!!
Next post திண்டுக்கல் அருகே மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர் தலைமறைவு!!