பெண்ணை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் கைது!!

Read Time:2 Minute, 1 Second

a9d68d31-1c67-420a-9856-b27c98402c08_S_secvpfதிருவள்ளூர் பெரும் பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் வாணி (19). இவரும் அதே பகுதி தகணி கோட்டை தெருவை சேர்ந்த தினேஷ் (28) என்பவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்தனர். பல இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்தனர். பின்னர் வாணி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தினேஷிடம் கூறினார்.

அதற்கு தினேஷ் மறுத்து விட்டார். இதனால் வாணி தினேஷ்சின் வீட்டிற்கு சென்று அவரின் தந்தை ராஜ்சிடம் முறையிட்டார். உங்கள் மகன் என்னை காதலித்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். நீங்கள் தலையீட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ், மற்றும் அவரது மனைவி ராகினி, தினேஷின் அண்ணன் ராஜேஷ், அண்ணி சுஜாதா, தம்பி பாபு ஆகிய 5 பேரும் சேர்ந்து வாணியை திட்டி அனுப்பி வைத்தனர். தினேஷ் உன்னை திருமணம் செய்ய மாட்டான் என்றும் கூறினார். இது குறித்து வாணி திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தினேசை கைது செய்தார்.

போலீசார் தினேஷ் வீட்டிற்கு வருவதை அறிந்ததும் தினேஷின் தந்தை ராஜ், தாய் ராகினி, அண்ணன் ராஜேஷ், அண்ணி சுஜாதா, தம்பி பாபு ஆகியோர் தலைமறைவாகி விட்டார். அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாப்பிட்ட உடனே செக்ஸை ஆரம்பிக்காதீங்க..!!
Next post பள்ளி மாணவி காதலனுடன் ஓட்டம்: கடத்தல் வழக்கில் காதலன் கைது!!