மணப்பாறை: சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்!!

Read Time:5 Minute, 5 Second

4f45bad1-402f-461d-8aad-3d9fdf9a2699_S_secvpfமணப்பாறை அருகே தந்தையை கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற மகனை போலீஸ் மோப்ப நாய் கவ்வி பிடித்து காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர்கள் நேற்று இரவு 10.30 மணியளவில் அருகில் உள்ள சீத்தாபட்டியில் நடந்த திருவிழாவிற்கு குறுக்கு வழியாக நடந்து சென்றனர்.

அவர்கள் சென்ற வழியில் ரத்தம் சிந்திக் கிடந்தது. உடனே டார்ச் லைட் அடித்தபடி ரத்தம் கிடந்த வழியாக சென்றனர். அப்போது முள் காட்டினுள் முதியவர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடப்பதை கண்டனர். இது குறித்து அவர்கள் புத்தாநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு மணப்பாறை டி.எஸ்.பி. முத்தரசு, துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் தங்கவேல், வையம்பட்டி இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஜெமிஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்தவர் பையில் இருந்து டிரைவிங் லைசென்ஸ் கண்டுபிடிக்கப் பட்டது.

அதில் இருந்த விவரங்களைக் கொண்டு இறந்து கிடந்தவர் குளத்துப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சின்னத்துரை (65) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குளத்தூரில் இருந்து சின்னத் துரையின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

அவர்களுடன் வந்த சின்னத்துரையின் மகன் நடராஜன் (42) என்பவரும் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளி யார் என போலீசார் விசாரணையை தொடங்கினர். கைரேகை நிபுணர் கொலை நடந்த இடத்திற்கு வந்து சோதனை நடத்தினார்.

சம்பவம் நடந்த இடத்துக்கு திருச்சியில் இருந்து வந்த மோப்ப நாய் ஜாக் அழைத்து வரப்பட்டது. அந்த மோப்ப நாய் சின்னத்துரை உடல் கிடந்த இடத்தில் இருந்து காட்டுப் பகுதி வழியாக ஓடி குளத்துப்பட்டியில் இருக்கும் நடராஜன் வீட்டின் முன்பு சென்று குரைத்தது. அப்போது குளித்து விட்டு வந்த நடராஜனை மோப்ப நாய் கவ்விப்பிடித்தது.

இதையடுத்து போலீசார் நடராஜனிடம் தீவிர விசாரணை நடத்தினர். முதலில் மறுத்து நடராஜன் பின்னர் தனது தந்தையை கழுத்தை அறுத்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.

சின்னத்துரைக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பழனியம்மாள் இறந்து விட்டார். 2–வது மனைவி பரமாயி. சின்னத்துரைக்கு மொத்தம் 6 பிள்ளைகள். சின்னத்துரை லாரி டிரைவராக இருந்துள்ளார். இவரது இரண்டாவது மனைவி பரமாயி மகன் நடராஜன். இவர் தனியார் கல்லூரி பஸ் டிரைவராக வேலை பார்த்துள்ளார்.

தனது தந்தையிடம் தனது பங்கு சொத்தை பிரித்து தருமாறு நடராஜன் கேட்டு வந்துள்ளார். ஆனால் சின்னத்துரை அதற்கு சம்மதிக்கவில்லை. மேலும் மற்ற பிள்ளைகளுக்கு பணம் கொடுத்து உதவி செய்துள்ளார். நடராஜனை கண்டு கொள்ளவில்லை.

இதனால் தந்தை மீது ஆத்திரத்தில் இருந்து நடராஜன் நேற்றிரவு அவரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். கொலை நடந்த சில மணி நேரத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் நடராஜனை பிடித்து விட்டனர். மோப்ப நாய் வருவதை அறிந்த நடராஜன் அதன் மோப்ப சக்தியில் இருந்து தப்பிக்க குளித்து விட்டு வந்துள்ளார். இருந்தும் மோப்ப நாய் திறமையாக கொலையாளியை பிடித்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த புத்தாநத்தம் போலீசார் நடராஜனை கைது செய்தனர். இச்சம்பவம் குளத்துப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதலி வீட்டில் சிக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்டு!!
Next post கொளத்தூரில் பெண்ணிடம் செயின் பறிப்பு: 2 வாலிபர்கள் கைது!!