கொளத்தூரில் பெண்ணிடம் செயின் பறிப்பு: 2 வாலிபர்கள் கைது!!

Read Time:1 Minute, 25 Second

fe5b3805-1d57-4040-b2ec-01eaea8bb032_S_secvpfகொளத்தூர் தென் பழனி நகரை சேர்ந்தவர் மரியம் ஜோசப். இவரது மனைவி மரியம்மாள் (48). இவர் உறவினர் வீட்டுக்கு செல்ல கொளத்தூரில் பஸ் நிலையத்தில் நின்றார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மரியம்மாள் கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்து சென்றனர்.

இது குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று ராஜமங்கலம் போலீஸ் நிலையம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளிலில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் கொளத்தூரை சேர்ந்த கணேஷ் (26) அம்பத்தூரை சேர்ந்த முரளி (22) என்பதும் மரியம்மாளிடம் நகையை பறித்ததும் தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து 4 பவுன் நகை – மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணப்பாறை: சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்!!
Next post குரோம்பேட்டையில் பெண்ணிடம் நகை பறிப்பு!!