பங்களா வீட்டில் விபசாரம்: துணை நடிகை உள்பட 3 பேர் கைது!!
வளசரவாக்கம் தாண்டவம் மூர்த்தி நகரில் பங்களா வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டை கண்காணித்த போது, விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து அந்த வீட்டிற்குள் போலீசார் அதிரடியாக நுழைந்து விபசார புரோக்கர்கள் ஷீலா, அவரது உறவினர் கோபி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அங்கு விபசாரத்தில் ஈடுபட இருந்த 2 பெண்களையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட ஷீலா துணை நடிகை ஆவார். பல டி.வி. சீரியல்களில் நடித்துள்ளார். இவரிடம் டி.வி.யில் நடிக்கும் ஆசையில் வாய்ப்பு கேட்டு வந்த இளம் பெண்களை விபசாரத்தில் தள்ளியது தெரிந்தது.
மீட்கப்பட்ட 2 பெண்களும் நடிப்பு ஆசையில் தங்கள் வாழ்க்கையில் பறி கொடுத்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதே போல் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலையில் காரில் இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல விபசார புரோக்கர் கேளம்பாக்கம் குமாரின் கூட்டாளி வித்யாதரன் என்ற கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.
கார், கொட்டிவாக்கம் ஸ்ரீராம் அவன்யூ பங்காள வீட்டில் விபசாரத்தில் ஈடுபட இருந்த மும்பை, கர்நாடகம், ஆந்திராவை சேர்ந்த அழகிகள் 5 பேரை மீட்டனர். காரும் பறிமுதல் செய்யபட்டது.
Average Rating