ஓடும் பஸ்சில் நிதி நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.1 லட்சம் கொள்ளை!!

Read Time:1 Minute, 18 Second

12ef179e-262e-4041-b117-46eab79e1f05_S_secvpfதிருவொற்றியூர், காலடிப்பேட்டை பெரிய மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை அவர் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கு ரூ.1½ லட்சம் பணத்தை பையில் வைத்து மாநகர பஸ்சில் (56சி) சென்றார்.

புதுவண்ணாரப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது பணப்பையில் ஜிப் திறந்து இருப்பதை கண்டு செல்வி அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த ரூ. 1 லட்சத்தை காணவில்லை.

பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமி பணத்தை அபேஸ் செய்து இருப்பது தெரிந்தது. ரூ.50 ஆயிரம் அவனது கையில் சிக்காததால் அது தப்பியது.

இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அசராமல் 26 முறை திருமணம் செய்துகொண்ட பெண்!!
Next post உயிர் கொடுத்தார் தாய் , கருவில் சுமந்தார் தந்தை உயிர் கொடுத்தார் தாய் , கருவில் சுமந்தார் தந்தை!!