திருவானைகாவலில் கணவர்–மாமியார் திட்டியதால் இளம்பெண் தற்கொலை!!
திருவானைக்காவல் 5ம் பிரகார வீதியை சேர்ந்தவர் வடிவேலு. கொத்தனார் பணி செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளி(25). இவர்களுக்கு 4 வயது மற்றும் 8 மாதத்தில் இரண்டு மகன்கள் உள்ளனர். வள்ளியின் தம்பி ஐய்யனார் கடந்த சில நாட்களாக அக்கா வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஐய்யனார் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் வடிவேலுவும் அவரது தாயாரும் வள்ளியை திட்டியதாக கூறப்படுகிறது. தன் கணவரும், மாமியாரும் திட்டியதால் மனவேதனை அடைந்த வள்ளி நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டினுள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வள்ளியின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Average Rating